Breaking News

தனியார் 'இ'- சேவை மையம் அமைக்க புதிய உரிமத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  கிராமந்தோரும் தனியார்   'இ'- சேவை மையம் அமைக்க புதிய உரிமம் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமந்தோரும் தனியார் 'இ'- சேவை மையம் அமைத்திட புதிய உரிமம் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

இவ்விண்ணப்பத்தினை மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in   என்ற இணையதளங்களில்   வருகின்ற 20.07.2023-க்குள் சமர்ப்பிக்குமாறும், மேலும் கூடுதல் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை (தொலைபேசி எண் : 044-29998040) அணுகுமாறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments