Breaking News

அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்தினை ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்புக்குழி ஊராட்சி  மற்றும்  திருப்பெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர் ஊராட்சிகளில் ரூ.103.70 இலட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்புக்குழி ஊராட்சி  மற்றும்  திருப்பெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர் ஊராட்சிகளில்  ரூ.103.70 இலட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்தினை இன்று (26.07.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

திருப்பெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர் ஊராட்சியில்,  உள்ள அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு ரூ.51.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். 

அதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட திருப்புக்குழி ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தினை பார்வையிட்டு,  அங்கு ரூ.51.85 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  கட்டப்பட்ட அரசு சமுதாய சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, சிகிச்சைக்கு வந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, சுகாதார நிலைய மருந்தகத்தினை  ஆய்வு செய்து, மருந்துகள் இருப்பு மற்றும் அனைத்து மருந்துகளும் கையிருப்பு  உள்ளனவா என கேட்டறிந்தார்கள்.

இவ் ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர், திரு.ஜா.சரவண கண்ணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. அர்பிட் ஜெயின், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க. சங்கீதா, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments