Breaking News

டிராவல்ஸ் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபர்கள் வெறி செயல்

காஞ்சிபுரம் :





காஞ்சிபுரம் மாநகராட்சி மிலிட்டரி ரோடு, ஓரிக்கை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் பூபாலன். சொந்தமாக கார் வைத்துக் கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

பூபாலன் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பொழுது எதிரே  மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள்  திடீரென பூபாலனின் மோட்டார் சைக்கிளை வழி மறித்து சரமாரியாக  அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பூபாலனை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரிவாள் வெட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு அறிவாளால் வெட்டி விட்டு சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்ற னர்.

ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய பூபாலனை முன் விரோதம் காரணமாக வெட்டி உள்ளார்களா அல்லது வேறு ஏதேனும் பகையா என காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் பல்வேறு கோணங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப் பகலில் நடைபெற்ற அரிவாள் வெட்டு சம்பவத்தால் காஞ்சிபுரம் மிலிட்டரி ரோடு பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

No comments

Thank you for your comments