Breaking News

21.07.2023 அன்று முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

21.07.2023 அன்று முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்  அவர்களின்  தலைமையில் 21.07.2023 (வெள்ளிக்கிழமை) அன்று  பிற்பகல்  5.00 மணிக்கு  முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

எனவே, முன்னாள் படைவீரர் சிறப்புக் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்த விதவையர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments