முத்துகோனின் 266-வது குருபூஜை ஜெயந்தி விழா
- சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 266வது குரு பூஜை விழா காஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது .
- தடையை மீறி வைக்கப்பட்டுள்ள அழகு முத்துகோன் சிலை திறந்து மாலை அணிவித்ததால் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 266வது குருபூஜை விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அழகு முத்துகோனின்பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் உள்ள யாதவ சமுதாய திருமண மண்டபத்தின் அருகில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வீரன் அழகு முத்துகோன் திருவுருவ படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்கள்.
இதை தொடர்ந்து கரகாட்டம், கட்டைக்கூத்து, பொம்மையாட்டம், ஆடி செல்ல தப்பாட்டம்,பேண்டு வாத்தியங்கள் முழங்க குதிரை வீரர்கள் முன் செல்ல வாகனத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அழகு முத்து கோன் திருவுருவ படத்துடன் யாதவ சமுதாயத்தினர் 500 மேற்பட்டவர்கள் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர்.
இதன்பின் அனுமதி இல்லாமல் பூக்கடை சத்திரம் பகுதி அருகே யாதவ சத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த அழகு முத்து கோன் சிலை திறந்து மாலை அணிவிக்க போலீசார் தடை விதித்தனர் இந்நிலையில் பேரணியாக வந்தவர்கள் போலீசார் தடுப்பை மீறி தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலையை திறந்து மாலை அணிவித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
No comments
Thank you for your comments