இந்தி தேர்வில் வெற்றிபெற்ற 300 மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கி சிறப்பிப்பு
காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஹிந்தி தேர்வில் வெற்றி பெற்ற 300 மாணவ மாணவிகளுக்கு காஞ்சி ஹிந்தி பிரேமி மண்டல் சார்பாக சான்றிதழ் வழங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது
இவ்விழாவில் ஹிந்தி ஆசிரியர் பணியில் 60 ஆண்டுகளாக அறிய சேவை ஆற்றிய திருமதி சரோஜினி ஜி. ஜி காமாட்சி அம்மன் ஆலய சாணிகர் சி.கே.சுரேஷ் சாஸ்திரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஹிந்தி தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 300 மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கிய ஆசி வழங்கினர்.
இதில் 17 இடங்களில் இந்தி வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள். பெற்றோர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். மாணவர்களின் இந்திய ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக காஞ்சி இந்தி பிரமி மண்டல் என்ற அமைப்பு கடந்த 12 வருடங்களாக இந்த விழாவினை சிறப்பாக தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது
No comments
Thank you for your comments