மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களுக்கு “இ சேவை” தளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு
ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு “இ சேவை” தளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜகோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு “இ சேவை” தளம்வழியாக மாற்றுத்திறனாளிகள கீழ்காணும் 5 திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- கல்வி உதவித்தொகை விண்ணப்பம்
- உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம்
- வங்கி கடன் மானிய விண்ணப்பம்
- திருமண உதவித்தொகை விண்ணப்பம்
- மாதாந்திர உதவித்தொகை விண்ணப்பம்
மேலும், இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை மாத இறுதி வரை இ-சேவை மூலமாகவும் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆகஸ்ட் 2023 முதல் மேற்காணும் திட்டங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்து மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், ஈரோடு மாவட்டம்.
No comments
Thank you for your comments