Breaking News

ராணி அண்ணாதுரை மாநகராட்சி பள்ளியில் கட்டடம் பூமி பூஜை அடுக்கல் நாட்டு விழா

காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை மாநகராட்சி பள்ளியில் ரூபாய் 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான  கட்டிடம் பூமி பூஜை. மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. 


காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை மாநகராட்சி பள்ளியில் ரூபாய் 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நான்கு வகுப்பறை கூடிய இரண்டு அடுக்கு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  

பதினெட்டாவது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியினை செய்துதரும் ஒரகடத்தில் உள்ள இந்தியா யமஹா மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் நாகசிம்மா. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார் 

இதில் துணைத்தலைவர்கள் கணேசன். குமார். துணை பொது மேலாளர் அனோக்கி‌. மேலாளர் பார்த்திபன். துணை மேலாளர் வைஷ்ணவி. ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இந்த நிறுவனத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு சமுதாயப் பணி திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடி 50லட்சம் ஒதுக்கி இந்த கட்டிடப் பணி துவங்கப்பட்டது. சுமார் 4 மாதங்களுக்குள் இந்த பணி நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இப்பணியினை புரோமார்க் ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் தலைவர் இளங்குமரன்.மூலம் கட்டிட பணி நடைபெற உள்ளது.இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ருக்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

2022 ஆம் ஆண்டு ஒரகடத்தில் உள்ள பள்ளியில் இதே நிறுவனம் மூலம் பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments