Breaking News

வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையம் திறப்பு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0  தொழில்நுட்ப  மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து,   மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்களும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்களும் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (13.07.2023)வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0  தொழில்நுட்ப  மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து,  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்களும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்களும் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் 1964 முதல் இயங்கி வருகிறது. இந்நிலையத்தில் 12 தொழிற் பிரிவுகளில் 700 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வந்தனர். இத்தொழிற் பயிற்சி நிலையத்தில் கடந்த ஆண்டு 308 பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் 223 பயிற்சியாளர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற்று வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 4 புதிய தொழிற் பிரிவுகளில் பயிற்சி அளிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் கட்டிடமும், இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டு, கீழ்காணும் புதிய 4 தொழிற் பிரிவுகளில் ஆகஸ்ட் 2023 முதல் 128 பயிற்சியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

1.. Manufacturing Process Control andAutomation

2. Industrial Robotics and Digital Manufacturing

3. Basic Designer and Virtual Verifier (Mechanical)

4. Advanced CNC Machining Technician

இத்திட்டத்தின் மூலம் ஐ.டி.ஐ பயிற்சி பெறுபவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட  வேலைவாய்ப்புடன் கூடிய மேம்பட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.  Hydraulic, Pneumatic, and Computerized முறையில் பயிற்சி அளிக்கப்படும். உயரிய தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உலகளாவிய பயிற்சி உறுதி செய்யப்படுகிறது. பொருத்தமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் டாடா தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து Industry 4.0 எனும் நவீன தரத்திற்கு தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.

இந்த தொழில்நுட்ப மையத்தில் பயிற்சி பெறும் மாணாக்கர்களுக்கு விளக்கம் அளிக்க பேட்டரியால் இயங்கும் 5 ஆய்வகங்கள்,  மூன்று சக்கர வாகனங்கள் 1, நான்கு சக்கர வாகனங்கள் 2, டெம்போ 1 புதிதாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 நவீன சி.என்.சி இயந்திரங்கள், 1 லேசர் கட்டிங் இயந்திரம், 1 பெயிண்டிங் பூத், 2 ரோபோட்டிக் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வேலூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி.அமுதா ஞானசேகரன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் திரு.சங்கரலிங்கம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குநர்/முதல்வர் திரு.கா.இரவி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்


No comments

Thank you for your comments