Breaking News

மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி




கடன் செயலி (LOAN APP) மோசடி 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை கைப்பேசி செயலி மூலம் பதிவேற்றம் செய்வது தொடர்பாக 1086 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இன்று (13.07.2023) வட்ட வாரியாக பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சி வட்ட வாரியாக வருவாய் கோட்ட அலுவலர்கள், மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள், வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரால் காஞ்சிபுரம் வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக  மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில்  306 தன்னார்வலர்கள் பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், உத்திரமேரூர் வட்டத்தில் அருள்மிகு மீனாட்சி அம்மன் கல்வியியல் கல்லூரியில் 200  தன்னார்வலர்களுக்கும், வாலாஜாபாத் வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் 130  தன்னார்வலர்களுக்கும்,  திருப்பெரும்புதூர்  வட்டத்தில்  வட்டாட்சியர் 

அலுவலக கூட்டரங்கில் 150 தன்னார்வலர்களுக்கும், குன்றத்தூர் வட்டத்தில் செங்குந்தர் திருமண மண்டபம் மற்றும் சி.என்.சி திருமண மண்டபம் 300 தன்னார்வலர்களுக்கும் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை எவ்வாறு கைப்பேசி செயலி மூலம் பதிவேற்றம் செய்வது தொடர்பாக, செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் செயல்முறையினை கேட்டறிந்தார்.  

மேலும் முகாம் நடைபெறும் நாளன்று, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களுடன், கொண்டு வர வேண்டிய ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்குப் புத்தகம், மின்சார வாரிய கட்டண இரசீது, ஆகியவற்றை அசலாக சரிபார்த்து விண்ணப்பங்களை கைப்பேசி செயலி வழியே பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தினார். 

தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முகாம் இடத்திற்கு ஒரு நாள் முன்னதாக சென்று அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை உறுதி செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

இவ் ஆய்வின் போது  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ் உடனிருந்தார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments