Breaking News

திருமங்கலம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்த கோரிக்கை

காஞ்சிபுரம், ஜூலை 18:

ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள திருமங்கலம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் அக்கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட சுங்குவார்சத்திரம் அருகேயுள்ளது திருமங்கலம் ஊராட்சி. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த த.அன்பு(55) இதன் ஊராட்சி மன்றற தலைவராக இருந்து வந்தார். இவர் கடந்த 2021-ல் நடைபெற்றற தேர்தலில் ஊராட்சித் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

கத்திரிக்காய் கிரேவி
Brinjal curry recipe - Easy And Fast Cooking

இந்நிலையில் கடந்த 16.1.2023-ஆம் தேதி உடல்நலக்குறைறவால் காலமானார். அதன் பின்னர் துணைத் தலைவராக இருந்து வரும் ரேகா நரேஷ்குமாரே தலைவர் பதவியில் இருந்து வருகிறறார்.

கடந்த 6 மாத காலமாக ஊராட்சித் தலைவர் பதவி காலியாக இருப்பதால் உடனடியாக தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த வேண்டும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம், திருமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த அ.சூரியபிரகாஷ் , கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.


No comments

Thank you for your comments