விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் பயிர்க்கடன்கள் உட்பட மானியத்துடன் இடுபொருகள் வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.8,65,545/- (ரூபாய் எட்டு லட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து ஐந்நூற்று நாற்பத்தி ஐந்து) மதிப்பிலான பயிர் கடன் மற்றும் இடுப்பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (30.06.2023) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், 6 விவசாய பயனாளிகளுக்கு ரூ.5,51,845/- மதிப்பீட்டில் பயிர்க்கடன்களும், 6 விவசாய பயனாளிகளுக்கு ரூ.3,08,000/- மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடன்களும் மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில், 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.5,700/- மதிப்பிலான வரப்புப்பயிர் (உளுந்து), நேரடி நெல் விதைப்பு கருவி, தென்னங்கன்று, போன்ற வேளாண் இடுப்பொருட்களை மானியத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) முனைவர்.லோ.சுரேஷ், வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே) (பொ), திரு.ரா.ராஜ்குமார், மண்டல இணை பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments