முதலமைச்சர் கோப்பை-2023 விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் செல்வலும் வீரர்-வீராங்கனைகளை வழியனுப்பி வைத்தார் ஆட்சியர்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பை 2023 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த கபடி, சிலம்பம், வாலிபால் போன்ற விளையாட்டுகளை சேர்ந்த 76 வீரர், வீராங்கனைகள் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு ஜீன் 30 முதல் ஜீலை 25 வரை சென்னையில் பல்வேறு விளையாட்டு அரங்குகளில் நடைபெற உள்ளது.
இப்போட்டியை இன்று மாலை 04.00 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் போட்டியை துவக்கி வைக்க உள்ளார்கள்.
இதனை தொடர்ந்து இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பை 2023 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த கபடி, சிலம்பம், வாலிபால் போன்ற விளையாட்டுகளை சேர்ந்த 76 வீரர், வீராங்கனைகள் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வீரர், வீராங்கனைகளுக்கு டி-சட்டைகளை வழங்கி, வாழ்த்துகள் கூறி, வாகனத்தை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.இரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments