Breaking News

வேகவதி ஆற்றின் கரையோரம் 78 ஆக்கமிப்பு வீடுகள் இடிக்கும் பணி தொடங்கியது

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் கரையோரம் ஆக்கமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 78 வீடுகள் இடிக்கும் பணி தொடங்கியது.

காவல்துறை, வருவாய்த்துறை, அதிகாரிகள், மற்றும் மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி வழியாக செல்லும் வேகவதி ஆற்றில் கரையோரம் இரு புறங்களையும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் வேகவதி ஆற்றில் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில் அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிப்பூர்  பகுதியில் தமிழ் நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வழங்கப்பட்டு உள்ள வீடுகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை  நீர்வளத் துறை அதிகாரிகள்  மேற்கொள்ள உள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாயார் குளம் பகுதியில் உள்ள அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து காலி செய்யாமல் உள்ள 78 வீடுகளை ஜேசிபி உதவியுடன்  இடித்து அகற்றும் பணியை இன்று துவங்கி உள்ளனர்

ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் அகற்றப்படுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வருவாய்த்துறையினரும் ஆக்கிரமிப்பு வீடு இடிக்கும் பணியை மேற்பார்வைத்து வருகின்றனர்.

வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

No comments

Thank you for your comments