Breaking News

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.77,14,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிககள் வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், கட்டவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 82 பயனாளிகளுக்கு ரூ.77,14,000/- (ரூபாய் எழுபத்தி ஏழு இலட்சத்து பதினான்காயிரம் மட்டும்) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், கட்டவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 82 பயனாளிகளுக்கு ரூ.77,14,000/- (ரூபாய் எழுபத்தி ஏழு இலட்சத்து பதினான்காயிரம் மட்டும்) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பொது மக்களிடம் பேசியதாவது:

நமது மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை,  மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை,  சமூக நலன் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.  மேலும் திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். இன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு 30.06.2023 முதல் 10.07.2023 வரை பொதுமக்களிடமிருந்து, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம்,  பட்டா திருத்தம், பட்டா நகல், முதியோர் மற்றும் மாற்று திறனாளி உதவித்தொகை, ஊனமுற்றோர் நான்கு சக்கர வாகனம், இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 73 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டு,  82 தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு 77 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

பெறப்பட்ட மனுக்களில், மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 5 நபர்களுக்கும், பெட்ரோல் ஸ்கூட்டர்

1 நபருக்கும், வருவாய்த்  துறை  மூலம் அடிப்படை தேவைகளான முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் 10 நபர்களுக்கும், இலவச வீட்டுமனைப் பட்டா

29 நபர்களுக்கும், முழுபுலம் பட்டா 1 நபர்களுக்கும், குடும்ப அட்டை நகல்

10 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறை  மூலம் மகளிர் சுய உதவித் வங்கிக் கடன்

5 நபர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் சலவைப் பெட்டி 4 நபர்களுக்கும்,  தொழில் துறை மூலம் தொழில் கடன்

3  நபர்களுக்கும்,  வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் வேளாண் இடு பொருட்கள் 5 நபர்களுக்கும், வேளாண்மை பொறியியல் துறை மூலம்  பவர் டில்லர் இயந்திரம் மானியம் 1 நபருக்கும், தோட்டக்கலைத் துறை மூலம் நாற்றுகள், விதைகள்  3 நபர்களுக்கும் கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுய உதவிக்குழு கடன் 5 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும், இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் தொடர்ந்து நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு சென்று பார்வையிட்டு திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ச.ரம்யா, வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.தேவேந்திரன், வாலாஜாபாத். ஒன்றிய குழுத் துணைதலைவர் திரு.சேகர்,  வாலாஜாபாத் வட்டாட்சியர் திருமதி.சுபப்பிரியா,  கட்டவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர். திருமதி. எ.அஞ்சலம் அருள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், கட்டவாக்கம் ஊராட்சியில், அங்கன்வாடி மைய கட்டிடத்தை பார்வையிட்டு, அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை  ஆய்வு செய்தார். மேலும் கட்டவாக்கம் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையை பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார். 

அதனை தொடர்ந்து பூதேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை பார்வையிட்டு, பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு பாடம் நடத்தினார்கள். மேலும் பள்ளியின் வளாகத்தில் ரூ.7.48 இலட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்டு வரும்  சத்துணவு மையத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்பு காஞ்சிபுரம் வட்டம், வாலாஜாபாத் அரசு ஆதிதிராவிட நல மாணவியர் விடுதியை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இவ் ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.வெங்கடேஷ், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. முத்துசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments