குடும்ப நலச் செயலகம் சார்பில் விழிப்புணர்வு ரதம் -பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் ஆட்சியர் கலைச்செல்வி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, இன்று (12.07.2023) உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் எடுத்துக்கொண்டனர்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜ~லை 11 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் குடும்ப நலச் செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விழிப்புணர்வு ரதம் மற்றும் மருத்துவ செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது. விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.கோபிநாத், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.P.மலர்விழி, துணை இயக்குநர் (காசநோய்), துணை இயக்குநர் (தொழுநோய்), மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட குடும்பநலச் செயலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments