போக்சோ வழக்கில் எதிரிகளுக்கு 5 வருட சிறை தண்டனை விதிப்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்காடு கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி இயற்கை உபாதைக்கு வெளியில் செல்லும் போது எதிரி சரத்குமார்(23) த/பெ முருகையன், பெருமாள் கோவில் தெரு, செங்காடு என்பவரால் பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, எதிரி கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு. பின்னர் வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்களின் உத்தரவின்பேரில், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சித்ராதேவி, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் திருமதி.N.புவனேஷ்வரி, M.L., ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.
இந்நிலையில் இன்று (12.07.2023), மேற்படி வழக்கின் எதிரி சரத்குமார் (23) த/பெ முருகையன், பெருமாள் கோவில் தெரு, செங்காடு என்பவருக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமதி.தமிழரசி அவர்கள் மேற்படி எதிரி குற்றவாளி என உறுதிசெய்து 5 வருடம் சிறை தண்டனை, ரூபாய் 5,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய்.20,000/- ஏற்கனவே வழஙகப்பட்டுள்ளது. மேலும் அரசு தரப்பில் ரூபாய்.30,000/- வழங்க உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் எதிரிக்கு தண்டணை பெற்றுதர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
No comments
Thank you for your comments