சிறிய டைடல் பூங்கா கட்டுமான பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் சிறிய டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்து அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இந்த சிறிய டைடல் பூங்கா திட்டப் பணியானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 18.02.2023 அன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த சிறிய டைடல் பூங்காவானது சென்னை - பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகே 4.98 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. கட்டுமான பணிகள் ரூ.31.36 கோடி திட்ட மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 4 தளங்களுடன் அமைய உள்ளது. இதில் தரைதளம் 10,667.68 சதுர அடியும், முதல் தளம் 10,748.06 சதுர அடியும், இரண்டாம் தளம் 11,279.39 சதுர அடியும், மூன்றாம் தளம் 11,279.39 சதுர அடியும், நான்காம் தளம் 11,310.16 சதுர அடியும் என மொத்தம் 55,303.75 சதுர அடி பரப்பளவில் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இக்கட்டுமான பணிகளை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 10 மாத காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்ட வருமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது வேலூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி.அமுதா ஞானசேகரன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் திரு.சங்கரலிங்கம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குநர்/முதல்வர் திரு.கா.இரவி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.ஜெயராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்
No comments
Thank you for your comments