போக்சோ வழக்கில் இளைஞர் ரஞ்சித்குமாருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டணை விதிப்பு
போக்சோ வழக்கில் எதிரிக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டணை மற்றும் ரூ.15,000/- அபராதம் விதித்து தண்டணை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், மாகரல் காவல் நிலையத்தில் உத்திரமேரூர் தாலுக்கா, புத்தளி கிராமத்தைச் சேர்ந்த திருமதி.நவநீதம் என்பவர் தனது 7 வயது மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(26) த/பெ சங்கர் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 10.09.2020 அன்று புகார் கொடுத்தார்.
அப்புகார் மனு சம்மந்தமாக அப்போதைய காவல் ஆய்வாளர் திரு.மைனர்சாமி அவர்கள் வழக்கு பதிவு செய்து, எதிரியை கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர் இவ்வழக்கின் விசாரணையை முடித்து அப்போதைய தாலுக்கா காவல் ஆய்வாளர் திரு.இராஜகோபால் அவர்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். பின்னர் இவ்வழக்கு நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்களின் உத்தரவின்பேரில், தற்போதைய காஞ்சி தாலுக்கா காவல் ஆய்வாளர் திரு.பேசில் பிரேம் ஆனந்த், மாகரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர், நீதிமன்ற காவலர் திருமதி.லதா மற்றும் வசந்தி, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் திருமதி.N.புவனேஷ்வரி. M.L., ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.
இந்நிலையில் இன்று(25.07.2023), மேற்படி வழக்கின் எதிரி ரஞ்சித்குமாருக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமதி.R.K.P.தமிழரசி, M.L. அவர்கள் மேற்படி எதிரி குற்றவாளி என உறுதிசெய்து 32 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், இவ்வழக்கில் எதிரிக்கு தண்டணை பெற்றுதர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட உதவி காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
No comments
Thank you for your comments