கலைஞர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரிய காஞ்சிபுரம் 2வது வார்டுக்குட்பட்ட சாலை தெருவில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் அவர்களின் ஏற்பாட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் படத்துக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன், மாநகர கழக செயலாளர் சிகேவி தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், மாநகர துணை செயலாளர்கள் ஏ.எஸ்.முத்துசெல்வம், வ.ஜெகன்நாதன், பகுதி செயலாளர்கள் திலகர், வெங்கடேசன், மாவட்ட அணிகளை சார்ந்த செல்வி, ராதாகிருஷ்ணன், இ.ஜாபர், காஞ்சி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மாரிமுத்து, இளஞ்செழியன், எஸ்.வி.ரமேஷ், பி.என்.ரவி, சி.எஸ்.விஜி, வட்ட கழக செயலாளர்கள் செலவம், ரவி, மாநகராட்சி உறுப்பினர்கள் கமலக்கண்ணன், அஸ்மா பேகம், மாமல்லன், மற்றும் கழக அணிகளை சார்ந்த கழகத்தினர் மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கிய நிகழ்வில் பங்கேற்றனர்.




No comments
Thank you for your comments