Breaking News

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் ரூ.19,40,506/- மதிப்பிலான பயிர் கடன் மற்றும் வேளாண் கருவிகள் வழங்கல்...

காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.19,40,506/- மதிப்பிலான பயிர் கடன் மற்றும் வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (26.05.2023) நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில்,  16 விவசாய பயனாளிகளுக்கு ரூ.92,956/-  மதிப்பிலான பண்ணை கருவிகளின் தொகுப்பு, விசை தெளிப்பான், மின்கல தெளிப்பான் போன்ற இடுப்பொருட்களையும்,  தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை  சார்பில், 5  நபர்களுக்கு ரூ.29,250/- மதிப்பிலான கொய்யா, மா செடிகளும், வெண்டை, பூசணி விதைகளும் இடுப்பொருட்களாக மானியத்துடன் வழங்கப்பட்டது.

துணைப் பதிவாளர் காஞ்சிபுரம் சரகத்தின் சார்பில், 8 விவசாய பயனாளிகளுக்கு ரூ.7,30,600/- பயிர்க்கடன்களும் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. மேலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.10,87,700/- மதிப்பிலான (50 சதவீதம் அரசு மானிய விலையில்) விசை உழுவை இயந்திரமும் (பவர் டில்லர்)  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. கோ.சிவருத்ரய்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அர்பித்ஜெயின், இ.ஆ.ப., வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே) திரு.க.கணேசன், மண்டல இணை பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ,  மண்டல வேளாண் இணை இயக்குநர் திரு.சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments