Breaking News

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பி எஸ் வாசுதேவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் மாவட்ட பொருளாளர் சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பயிர் கடன் வழங்கும்போது உள்ள பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு சங்கச் செயலாளர்கள் மற்றும் பணியாளர் மேல் எடுக்கும் அடுத்த நடவடிக்கைகளும் முழுமையாக விளக்கிக் கொள்ளப்பட வேண்டும். 

மேலும் கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்ட பயிர் கடன் நகை கடன். மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பின் அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டு போராட்டம் நடைபெற்றது 

இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் சிவஞானம், கண்ணபிரான். இணைச்செயலாளர் சந்தானகிருஷ்ணன் தயா மண்டல இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments