Breaking News

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத்தில் குடி போதை தகராறில் வாலிபர் குத்திக் கொலை - இரண்டு பேர் கைது

காஞ்சிபுரம் 

மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியை சேர்ந்தவர்கள் வினித் குமார், பார்த்திபன் நண்பர்களான இருவரும் நேரு நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர்.


மது அருந்திக் கொண்டிருந்த பொழுது இருவருக்குள்ளும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.

வாய் தகராறு நடந்து கொண்டிருந்த பொழுது அங்கு  வந்த பார்த்திபனின் நண்பனான ஆட்டோ டிரைவர் சின்ராஜ் நண்பனுடன் சேர்ந்து கொண்டு வினித் குமாரை கடுமையாக தாக்கி மதுபாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தியுள்ளனர்.

கழுத்துப் பகுதியில் குத்தியதில் படுகாயம் அடைந்த வினித் குமார் ரத்த வெள்ளத்தில் துடித்து சத்தம் போட்டுள்ளார்.

இதனைக் கண்ட பகுதி மக்கள் உடனடியாக வினித்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வினித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

வினித் குமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு மது பாட்டிலால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பார்த்திபன், சின்னராஜ், ஆகிய இருவரையும் தேடிப்பிடித்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வினித்குமார் இன்று காலை கேரளாவுக்கு புறப்பட்டு சென்று கர்ப்பமாக உள்ள தனது மனைவியை பார்க்க இருந்த நிலையில் குடிபோதையில் நண்பனால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குடும்பத்தினர் மற்றும் நேரு நகர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Thank you for your comments