Breaking News

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் மரச்செக்கு எண்ணெய் உற்பத்திக் கூடம் துவக்கி வைத்தார் ஆட்சியர் மா.ஆர்த்தி

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் அய்யம்பேட்டை ஊராட்சியில்  ரூ. 10 லட்சம் மதிப்பில்  வேகவதி  உழவர் உற்பத்தியாளர்  நிறுவனம் சார்பில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்திக் கூடத்தினை  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் ஆரம்பிக்கபட்ட மகளிர்  உழவர்  உற்பத்தியாளர்  குழுக்களில்  உள்ள  1947  உறுப்பிளர்களை ஒருங்கிணைத்து வேகவதி  உழவர்  உற்பத்தியாளர் நிறுவனம்  உருவாக்கப்பட்டது. 

இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்து மதிப்புகூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்திட, வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி துவக்கி வைத்து தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ரூ.8 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்கள்.


இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் வேர்கடலை, எள்ளு மற்றும் தேங்காய் கொள்முதல் செய்து மதிப்பு கூட்டுதல் நடவடிக்கையாக எண்ணெய் உற்பத்தி செய்து "ஸ்ரீ-காஞ்சி" எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் மாவட்டத்தில் 113 உழவர் உற்பத்தியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் திரு.தினகர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments