காஞ்சிபுரம் ஸ்ரீ கோமளவல்லி நாயிகா சமேத யதோத்தக்காரி சுவாமி ஆலயத்தில் பங்குனி பிரம்மோற்சவம்
காஞ்சிபுரம் ஸ்ரீ கோமளவல்லி நாயிகா சமேத யதோத்தக்காரி சுவாமி ஆலயத்தில் பங்குனி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ கோமளவள்ளி நாயிகா சமேத ஸ்ரீயதோத்தகாரி சுவாமி ஆலயத்தில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றதுடன் துவங்கி இன்று 4ம் நாள் பெருமாள் சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருகச்சி நம்பி தெரு, செட்டி தெரு வழியாக வரதராஜ பெருமாள் கோயில் வரை சென்று மீண்டும் ஆலயத்திற்கு எழுந்தருளினார்.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு பெருமாளை தரிசனம் செய்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளின் பேரருளைப் பெற்றுச் சென்றனர்.



No comments
Thank you for your comments