Breaking News

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்ச்சி... போக்சோ வழக்கில் 18 வருட சிறை தண்டனை விதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐயஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த அகிலன்(32) த/பெ ராமதாஸ் என்பவர் கடந்த 09.03.2016 அன்று 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்தது சம்பந்தமாக அப்போதைய காவல் ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள் வழக்கு பதிவு செய்து, எதிரியை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். பின்னர் வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்,  அவர்களின் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.காயத்ரி, நீதிமன்ற காவலர் திருமதி.லதா மற்றும் திருமதி.வசந்தி, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் திருமதி.N.புவனேஷ்வரி M.L., ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.



இந்நிலையில் இன்று(20.03.2023) மேற்படி வழக்கின் எதிரி அகிலனுக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி  திருமதி.R.K.P.தமிழரசி, M.L. அவர்கள் மேற்படி எதிரி குற்றவாளி என உறுதிசெய்து 18 வருடம் சிறை தண்டனை, ரூபாய் 15,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


மேலும், இவ்வழக்கில் எதிரிக்கு தண்டணை பெற்றுதர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர், நீதிமன்ற நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

No comments

Thank you for your comments