11 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி.
செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் தனியார் பள்ளியில் சேலஞ்சர்ஸ் சதுரங்க கழகம் சார்பில் பதினொரு வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைப்பெற்றது.
இதில் 150 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த 200 மாணவ,மாணவிகள் கலந்துக்கொணடனர். 6 சுற்றுகளாக நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் இரண்டு மாணவ,மாணவிகள்,மாநில அளவில் நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
இதே போன்று மகளிர்களுக்காக நடைப்பெற்ற செஸ் போட்டியில் வயது வரம்பின்றி 30 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் மகளிருக்காக நடைபெறும் செஸ் போட்டியில் கலந்துக்கொள்ளும் வாய்பை பெறுவார்கள்
இப்போட்டிகளை தனியார் பள்ளி முதல்வர் லட்சுமி பிரபா துவங்கி வைத்தார்.இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவி மற்றும் மகளிருக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை மேனகா எலக்டிரிக்கல் நிறுவன உரிமையாளர் ஜானகிராமன் வழங்கினார். மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் மகளிருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சதுரங்க கழக மாவட்ட செயலாளர் புவனா சாய்,துணைச்செயலாளர் பானுமதி,கிருஷ்ணமூர்த்தி செங்கல்பட்டு தாலுக்கா நிர்வாகிகள், பள்ளி மாணவ,மாணவிகள்,மகளிர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்
Post Comment
No comments
Thank you for your comments