Breaking News

குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு ஆர்.எஸ்.புரத்தில் புஷ்பாஞ்சலி

கோவை  :

1998 பிப்ரவரி 14 ஆம் தேதி கோவையில் குண்டுவெடிப்பு நடந்து  60க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆண்டுதோறும் இறந்து போன தியாகிகளுக்கு புஷ்பாஞ்சிலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நடைபெறுகிறது.


அதே போல் இந்த ஆண்டும்  ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபிஸ் அருகே நடைபெற்றது. பாரதிய ஜனதாகட்சியின் மாநில தலைவர்  கே.அண்ணாமலை,  இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம்,  விசுவ ஹிந்து பரிசத்தின் மாநில செயலாளர் லட்சுமி நாராயணன் அவர்களும் சிறப்புரையாற்றினர்.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் உத்தம் பாலாஜி வரவேற்புரையாற்றினார். தெற்கு மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் மகிழ்வுரையாற்றினார். 



ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் ராஜா சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் ஜெ.எஸ்.கிஷோர் குமார் எஸ்.சதீஷ் மாவட்ட செய்தி தொடர்பாளர் சி.தனபால் உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments