Breaking News

தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.


தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான ஜனவரி 30-ஆம் நாள் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஜனவரி 31  முதல் பிப்ரவரி 14  வரை ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு இயக்கத்தின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு பொது மக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று (13.02.2023)  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  பள்ளி கல்லூரி மாணவ/மாணவியர்கள் பங்கு பெற்ற தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். 

இப்பேரணியானது காஞ்சிபரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, காவலான் கேட் மற்றும் மேட்டு தெரு வழியாக சென்று வள்ளல் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பல்லவன் மருந்தியல் கல்லூரி, சங்கரா செவிலியர் கல்லூரி மற்றும் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவ/மாணவியர்கள் சுமார் 350 பேர் கலந்து கொண்டார்கள்.

இப்பேரணியில் வெளிர்ந்த அல்லது சிவந்த உணர்ச்சி அற்ற மேல் தொழுநோயாக இருக்கலாம். கூட்டு மருந்து சிகிச்சை தொழுநோயை முற்றிலும் குணப்படுத்தும். ஆரம்பநிலை சிகிச்சை உடல் ஊனத்தை தடுக்கும். தொழுநோயை வென்று சரித்திரம் ஆக்குவோம் போன்ற வாசகம் எழுதிய தொழுநோய் விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி சென்றனர்.

இப்பேரணியில் துணை இயக்குநர்  (தொழுநோய்) மரு.கனிமொழி, மாவட்ட நலக்கல்வியாளர் திரு.பி.உமாசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments