Breaking News

அமைதி பேரணி நிறைவை முன்னிட்டு தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியினை ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சி இளம் தலைவர் ராகுல் காந்தி அமைதி பேரணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் கட்சி கொடியை ஏற்றி  இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்



கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எம். ஆர் .ஆர். ராதா கிருஷ்ணன் தலைமையில்

செப்டம்பர் 7ஆம் தேதி  கன்னியாகுமரியில் தொடங்கி இந்தியா முழுவதும் அக்கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் சுமார் 3500 கிலோ மீட்டர் நடைபெற்ற அமைதி பேரணி இன்று காஷ்மீரில் முடிவடைந்தது 

இதனை கொண்டாடும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியினை ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இதில் காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments