வாகன சோதனையில் ரூபாய் 93,500 அபராதம் - வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் அதிரடி!
காஞ்சிபுரம் :
டாட்டா மேஜிக் வாகனங்களினால் காஞ்சிபுரம் நகரில் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது, மேலும் கண்ட இடங்களில் நிறுத்தி மக்களை ஏற்றுவதாகவும் சரிவர போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதில்லை என பொதுமக்களிடமிருந்து புகார் வந்ததின் பேரில் 11-2-2023 (சனிக்கிழமை) அன்று காலை 11 மணியளவில் சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் அருகே காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் கா. பன்னீர்செல்வம் தலைமையில் B-2 காவல்துறையினர் இணைந்து சோதனை ஈடுபட்டனர்.
இதில் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த 10 டாடா மேஜிக் மற்றும் இரண்டு சரக்கு வாகனம் என ஆக மொத்தம் 12 வாகனங்களுக்கு, பல்வேறு விதி மீறல்களுக்காக அபாரதமாக ரூபாய் 93,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தகுதி சான்று இல்லாத தண்ணீர் கேன் ஏற்றி சென்ற ஒரு வாகனம் சிறைபிடிக்கபட்டு விஷ்னுகாஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்க பட்டது.
No comments
Thank you for your comments