தண்டவாளத்தின் நடுவே பழுதடைந்து நின்ற டிப்பர் லாரி... 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு... மெத்தனமாக செயல்பட்ட ரயில்வே காவல்துறை
விருத்தாச்சலம் அருகே கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி, தண்டவாளத்தின் நடுவே பழுதடைந்து நின்றதால், பல மணி நேரமாக காத்துக் கிடந்த வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து, செராமிக் பொருட்கள் தயாரிக்க பயன்படும், கிராவல் மண்ணை ஏற்றி கொண்டு, விருத்தாச்சலம் நோக்கி, டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது சின்ன கண்டியாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள, கடலூர்- விருத்தாச்சலம் செல்லும் ரயில் தண்டவாள கேட்டினை, கடக்க முற்பட்டபோது, திடீரென லாரியின் அச்சி முறிந்ததால், தண்டவாளத்தை அருகே, எந்த பக்கமும் செல்ல முடியாமல் நடுவில் நின்றது.
இதனால் தண்டவாளத்தின் இரு பக்கமும், சுமார் 2 மணி நேரமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மேலும் தண்டவாளத்தில் முன்பு, வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், கிராவல் மண் கொட்டிக் கிடந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு, பளுதூக்கும் கிரேன் வாகனம் மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், தண்டவாளத்தின் நடுவே நின்ற லாரியை அகற்றி வெளியே கொண்டு வந்தனர்.
சுமார் இரண்டு மணி நேரமாக அப்பகுதியில்ல் போக்குவரத்து பாதிக்கப்பட்டும், போக்குவரத்தை நெரிசலை சரி செய்ய, ரயில்வே காவல்துறை வரவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.


No comments
Thank you for your comments