மது போதை தலைக்கு ஏறிய மாற்றுத்திறனாளி சாலை நடுவில் படுத்து அலப்பறை
விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே மது போதை தலைக்கு ஏறிய மாற்றுத்திறனாளி நடு சாலையில படுத்து அலப்பறையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே உளுந்தூர்பேட்டை சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவர் மது போதையில் அந்த வழியாக வந்த பேருந்து செல்வதற்கு வழி விடாமல் போக்குவரத்திற்கு இடையூறாக அலப்பறையில் ஈடுபட்டார்.
பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவது- முதல்வர் ஆவேசம் பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்... நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு 🖱 ரபேல் வாட்ச் விவகாரம்..நாம் போட்டுள்ள சட்டை, வேட்டி, காரை பற்றியெல்லாம் பேசி வருகிறார்கள்-அண்ணாமலை |
பேருந்தின் நடத்துனர் இறங்கி வந்து மாற்றுத்திறனாளியை ஓரம் போக கூறினார், இதனை ஏற்காத மாற்றுத்திறனாளி ரோட்டில் படுத்து அலப்பறையில் ஈடுபட்டார் பின்பு பஸ்சை ஓரமாக எடுத்துச் சென்றனர்.
மீண்டும் அவரது அலப்பறை உச்சகட்டத்தை எட்டியதால் அவ்வழியாக நடந்து சென்றவர்கள் அவரை கையைப் பிடித்து இழுத்து சாலை ஓரம் படுக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


No comments
Thank you for your comments