74- வது குடியரசு தின விழா - தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பேரூராட்சி தலைவர் செ.செல்வன்
கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் 26.01.2023 இன்று இந்திய நாட்டின் 74- வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பேரூராட்சி தலைவர் திரு. செ.செல்வன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயல் அலுவலர் இரா.சுந்தர்ராஜ் சிறப்புரை ஆற்றினார்.
7 வது வார்டு உறுப்பினர் திரு. பெ.ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றினார். மேலும் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துநிலை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

.jpg)

No comments
Thank you for your comments