Breaking News

உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறுவு மைய கூட்டரங்கில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.



காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒரு நாள் செவ்வாய்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின்  முன்னிலையில் மாவட்ட உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, துறைவாரியாக பிரித்து அம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் இன்று முதல் மனுக்கள் பெறப்படுகின்றது. இதற்கென்று   தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்ககூடிய மனுக்கள் மீது உரிய  நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் நிதி ஆதாரத்துடன் கொண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்படும். வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் காலை காஞ்சிபுரம் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறும். 

🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு... 

பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை

இன்று  நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில் 820 மனுக்களை உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும்  பொது மக்கள் கோரிக்கைகளாக  மனுக்கள்  பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள்,  வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாயகள் தூர்வரப்பட்டு சரிசெய்ய வேண்டும்,  மின்கம்பங்களை மாற்றப்பட வேண்டும்,  சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது அதனை சரிசெய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இன்று பெறப்பட்டுள்ளது.


நமக்கு தெரியாத சில பிரச்சனைகள் மற்றும் மக்களின் தேவைகளை இன்று மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது. அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலவலர்களுக்கு  அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுரைத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  அவர்கள்  தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு பிறகு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு சார்பில், அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் கோட்டம் கீழ்கதிர்பூர் திட்ட பகுதி அடுக்குமாடி குடியிருப்புகளை 180 பயனாளிகளுக்கு ஒதுக்கி, ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் வீடு திட்டம் என்ற திட்டத்தின்கீழ்  அரசு மானியமாக ரூ.2.10 இலட்சம் பெற்று பயனாளி தாமாக வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 30 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. நாவலூர் திட்ட பகுதியில் 19 குடியிருப்புதாரர்களுக்கு கிரயபத்திரம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சுதாகர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை திரு.ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பி.ஸ்ரீதேவி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.தேவேந்திரன், திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர், திரு.எஸ்.டி.கருணாநிதி, உள்ளாட்சி மன்ற பிரநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments