விருத்தாசலம் நகர ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
ரஜினிகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் நகர ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் இனிப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் நகர ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் பாலக்கரை, கடைவீதி, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு...
பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை
இந்நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் நகர ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை தலைவர் ரஜினி பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது
இதில் தென்றல் முருகன், பாலமுருகன், சரவணன், ரமேஷ், டிரைவர் சுந்தரமூர்த்தி, வீரமணி, கார்த்தி, ஆட்டோ முருகன், அரிவரசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளையும் மரக்கன்றுகளையும் வழங்கினர்.


No comments
Thank you for your comments