Breaking News

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் அரசு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரமும் வழங்கல்

 காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (30.12.2022) நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்தகூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினர்.மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

 

🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு

இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 11 விவசாய பயனாளிகளுக்கு ரூ.4 இலட்சத்து 67 ஆயிரத்து 951 ரூபாய்  மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பட்டது. 

வேளாண்மை துறை சார்பில் 3  நபர்களுக்கு இடுப்பொருட்கள் முழு மானியத்துடன் வழங்கப்பட்டது. 2 விவசாய பெருமக்களுக்கு  விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை சார்பில், அங்ககச்சான்று  வழங்கப்பட்டது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்  துறை சார்பில், சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான ஆணை 2 நபர்களுக்கும்,  முருங்கை விதைப்பொருள் 1 நபருக்கும் மற்றும் வெண்டை விதைப்பொருள் 1 நபருக்கும் வழங்கப்பட்டது. வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் பவர் டில்லர்  இயந்திரமும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. கோ.சிவருத்ரய்யா, மண்டல வேளாண் இணை இயக்குநர் திரு.இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

No comments

Thank you for your comments