சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க காவல் வளாகப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி
கோவை :
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் அலுவலகங்கள், காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் காவல் குடியிருப்புகளில் காவல்துறையினரால் தூய்மை பணி மேற்கொண்டு காவல் வளாகப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க மரக்கன்றுகள் நடப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகம் மற்றும் போத்தனூர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். உடன் காவலர்களும் மரக்கன்றுகளை நட்டனர்.

  
No comments
Thank you for your comments