Breaking News

தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள்: 17 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோவை :

தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்த்து, சமீபத்தில் தேசிய பசுமை  தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து ஒரு வழக்கை எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில், இரண்டு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள 17 மாவட்டங்களில் கழிவுகள் எப்படி கையாளுப்படுகின்றன என்பது பற்றிய விரிவாவான அறிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு - கேரள எல்லையான கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் கடந்தாண்டு கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டதாக 3 லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர். 

இதேபோன்று தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியில் உள்ள தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கேரளாவில் இருந்து வாகனங்களில் எடுத்து வரப்படும் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினரான நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினரான சத்தியகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளனர். 

கழிவுகளை கொட்டுவது குறித்து உறுதியான முடிவுகளை இரண்டு மாநில அரசு எடுக்கவில்லையெனில், அண்டை மாநிலங்களில் கழிவுகளை கொட்டும் நடைமுறையை நிறுத்த முடியாது என்று கூறியுள்ள பசுமை தீர்ப்பாயம், இரண்டு மாநில தலைமை செயலாளர்களையும் இந்த வழக்கில் இணைத்துள்ளது.

🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு... 

பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களும், கேரளத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 2023 ஜனவரி 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

No comments

Thank you for your comments