Fridge- ஆல் நேர்ந்த விபத்து... குடும்பத்துடன் 3 பேர் உயிரிழிப்பு... ஆட்சியர் ராகுல்நாத் முக்கிய வேண்டுகோள்
பயன்படுத்தாமல் இருக்கும் மின்சார சாதனங்களை, டெக்னீசியன் அறிவுறுத்தலுடன் பயன்படுத்துங்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கோதண்டராமன் நகர் , ஜெயலக்ஷ்மி தெருவில் ஆர் ஆர் பிருந்தாவன் அப்பார்ட்மெண்டில், இன்று நடைபெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து விபத்து எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து விசாரணையும் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல்நாத் கூறுகையில்
முதற்கட்டமாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், ஒரு வருடங்களுக்கு மேலாக இந்த வீடு பூட்டி இருந்துள்ளத, இதன் காரணமாக மின்சார சாதனங்கள் ஆகியவை பழுதடைந்து இருக்கலாம், அதை பயன்படுத்திய காரணத்தினாலேயே, இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என தெரிவித்தார். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார் .
மாவட்டத்தில் இருக்கும் பொது மக்கள் யாரும் பழுதடைந்த மின்சார பொருட்களை பயன்படுத்த வேண்டாம், அதேபோல் சிறிது காலம் பயன்படுத்தாமல் இருக்கும் மின்சார பொருட்களை, டெக்னீசியன் அறிவுறுத்தலின்படி பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

No comments
Thank you for your comments