தலை கவசம் அணிய விழிப்புணர்வு
திருவள்ளூர் மாவட்டம் தமிழக அரசு உத்தரவு பெயரில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலை கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதே சமயத்தில் தலை கவசம் அணியாதவர்களிடம் வசூலாக ரூபாய் 1000 வசூலிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இந்நிலையில் ஆவடி ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இருசக்கர வாகன ஓட்டிகளிடம் தவை கவசம் அவசியம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வந்த உத்தரவின் பெயரில், திருநின்றவூர் அடுத்த பாக்கம் செக்போஸ்ட் அருகில் போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கரன் முத்தா புதுப்பேட்டை போக்கு வரத்து காவல் ஆய்வாளர் கௌதமன் உள்ளிட்டோர் பாக்கம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைக்கவசம் அணியாதர்களை நிறுத்தி அவர்களை ஒன்றாக அழைத்து அவர்களிடம் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் தலை கவசித்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அவர்களிடம் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

No comments
Thank you for your comments