காஞ்சிபுரம் அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீவள்ளி தெய்வானை முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்
காஞ்சிபுரம் அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீவள்ளி தெய்வானை முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள் மிக மூத்தீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி உற்சவம் முடிந்து விழா நிறைவு பெறும் வகையில் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
இதில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை மாற்றி மாங்கல்ய தாரணம் சமர்ப்பித்து திருக்கல்யாணம் வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
இதில் பக்தர்கள் பாடல்கள் பாடி தொடர்ந்து தூப தீப ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழு தலைவர் சரவணன். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்தனர்.



No comments
Thank you for your comments