திருட்டு வழக்கில் கைதான நபருக்கு 244 நாட்கள் சிறை தண்டனை
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் காவல் நிலையத்தில் கடந்த 28.12.2021 அன்று வெங்கட ரமணன் வயது (56) என்பவர் பட்டாபிராம் காவல் நிலையத்தில் தனது வீட்டில் ஆறு சவரன் தங்க நகை திருடு போனதாக புகார் அளித்திருந்தார்
இது தொடர்பாக பட்டாபிராம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கிறிஸ்டோபர் வயது (32)சூரிய நாராயண தெரு காசிமேடு பகுதியில் வசித்து வருபவர் இந்த நகையை திருடியதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இவரை பிடித்து திருவள்ளூர் ஜே எம் 11 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்
இந்த வழக்கு விசாரணை 22.10.2022 அன்று விசாரணை முடிந்து இவர் தான் குற்றவாளி என்பது உறுதியானது. இதை தொடர்ந்து இவருக்கு கணம் ஜே எம் 11 திருவள்ளூர் நீதிமன்றம் 244 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் கைது செய்த ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் தற்போது உள்ள ஆய்வாளர் லாரன்ஸ் ஆகியோரை ஆவடி காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் பாராட்டினார்

No comments
Thank you for your comments