Breaking News

மத்திய அமைச்சர் தலைமையில் ஜல்ஜீவன் மிஷன் திட்டபணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் உயர்நீர் இயக்க (ஜல்ஜீவன் மிஷன்) திட்டபணிகள் குறித்து ஆய்வு கூட்டம்,  ஒன்றிய நீர்வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சர் ஸ்ரீகஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இன்று (13.10.2022) காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் உயர்நீர் இயக்க (ஜல்ஜீவன் மிஷன்) திட்டபணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாண்புமிகு ஒன்றிய நீர்வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சர் ஸ்ரீகஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இவ்வாய்வு கூட்டத்தில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் உயர்நீர் இயக்க திட்டப்பணிகள், தூய்மைபாரத திட்டத்தின் பணிகள் மற்றும் குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இத்திட்டங்கள் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் முடிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

ஒவ்வொரு வீட்டிலும் "குட்டி காவலர் "


தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 124.94 இலட்சம் வீடுகளில் 69.50 இலட்சம் (55.63%)  வீடுகளில்  குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தி ஒன்றிய அரசிடம் விருது பெற்று உள்ளது. அதேபோல் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தனிநபர் கழிபறைகள் அமைக்கும் பணியினை இம்மாவட்டம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

விதிமுறைகள் மீறி மணல் கொள்ளை... 
அந்த குழியில் போட்டு அவர்களை மூட வேண்டும்... 

திராவிட கட்சிகள் மீது பாய்ந்த சீமான்..

இத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஓராண்டு காலமாக தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதைனை இத்தருணத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இக்கூட்டத்திற்கு பிறகு, திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளிடம் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்கள் கலந்துரையாடினார். இத்திட்டத்தினால் பயன்பெற்றவர்கள் பாரத பிரதமர் அவர்களுக்கு தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.தட்சணாமூர்த்தி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., இந்திய அரசின் ஜல்சக்தி துறை இயக்குநர் திரு. விஸ்வ கண்ணன், இ.வ.ப.,   தமிழக ஜல்சக்தி துறை கூடுதல் இயக்குநர் திரு.ஆனந்த ராஜ்,  தனிசெயலர் திரு.உதய சௌத்ரி, இ.ஆ.ப.,  மாவட்டகாவல் கண்காணிப்பு அலுவலர் மரு.சுதாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பி.ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.                                                                      

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments