நம்ம ஊரு சூப்பரு வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
இன்று ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் வட்டார அலுவலர் நிலையிலான நம்ம ஊரு சூப்பரு செயல் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் மலர்க்கொடிகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டல அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
மேற்கண்ட கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர், வட்டார கல்வி அலுவலர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், உதவி பொறியாளர், மண்டல துணை வ.வ.அலுவலர், பணி மேற்பார்வையாளர், சுகாதார ஒருங்கிணைப்பாளர், வட்டார மகளிர் திட்ட அலுவலர், ஊராட்சி செயலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments
Thank you for your comments