Breaking News

போதை பொருள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு - எஸ்பி சுதாகர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களிடையே போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்திருந்ததின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றார்.


18.08.2022 அன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலத்திலிருந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் பள்ளி மாணவர்களிடையே போதைப்
பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.



No comments

Thank you for your comments