பரந்தூர் விமான நிலையம்... முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் கிராம மக்களிடம் குறை கேட்பு..
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம் பகுதியில் ஏர்போர்ட் அமைய உள்ள நிலையில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் அப்பகுதி கிராம மக்களிடம் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
உடன் கழக அமைப்புச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் குன்றத்தூர் ஒன்றிய கழகச் செயலாளருமான மதனந்தபுரம் பழனி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்,
ஒன்றிய கழக செயலாளர்கள் சிங்கிலி பாடி ராமச்சந்திரன், அத்திவாக்கம் ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், பகுதி கழக செயலாளர்கள் பாலாஜி, கோல்டு ரவி, மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர். மணிவண்ணன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் திலக் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன்,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எம்.எம். மதன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே. எஸ் .பிரபு, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் வெற்றி பாண்டியன், உள்ளிட்டோர் உள்ளனர்.
No comments
Thank you for your comments