145 பவுன் தங்க நகைகள் 20 லட்சம் பணம் கொள்ளை
ஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருகே பெரியநத்தம் கிராமத்தில் 145 பவுன் தங்க நகைகள், 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியநத்தம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி (52) நேற்று அமாவாசை என்பதால் தனது குடும்பத்துடன் கணபதியின் மனைவி செல்வி இவர்களுடைய இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என ஐந்து பேரும் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் சென்று வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது கொள்ளையர்கள் முன்பக்க கதவை உடைக்க முயன்றுள்ளனர் முடியாததால் பின் பக்க கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
உள்ளே சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த 145 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது
கொள்ளை சம்பவம் குறித்து மாகறல் போலீசார்க்கு தகவல் தெரியபடுத்தினர் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த கணபதி வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
காஞ்சிபுரம் அருகே 145 பவுன் தங்க நகைகள் 4 கிலோ வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரூபாய் பணண் திருடுபோனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments