ராஜீவ் காந்தி முழு உருவவெண்கல சிலை அமைக்க காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
காஞ்சிபுரம் டிகே நம்பி தெருவில் ராஜீவ் காந்தி முழு உருவவெண்கல சிலை அமைக்க காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
காஞ்சிபுரம் டி.கே .நம்பி தெருவில் முன்னாள் நகர செயலாளரும் முன்னாள் நகர துணைத் தலைவருமான மோகன் என்பவர் தனக்கு சொந்தமான காலி இடத்தினை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு கடந்த 12-05-2022. காஞ்சிபுரம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் தானமாக வழங்கி பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து மோகன் தலைமையில் அந்த இடத்தில் ராஜீவ் காந்தி அவர்களின் முழு வெண்கல சிலை அமைத்திட மாவட்ட ஆட்சியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதில் மாநகர தலைவர் நாதன் , மாவட்டத் துணைத் தலைவர் அன்பு, இளைஞர் அணி யோகி, நகர நிர்வாகி காஞ்சி காமராஜ். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் ஜெயம் ரவியின்..
மௌனம் கலைவோம்..குறும் படம்

No comments
Thank you for your comments