Breaking News

கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிகள் சிறையில் அடைப்பு

ஓராண்டிற்குகான நன்னடத்தை ஆணையை மீறி கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டதால் இரண்டு ரவுடிகள் சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க பாலுசெட்டிசத்திரம் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 



1.துளசிராமன் ( 25 ) த / பெ.சம்பத்,  நெ.353/3 சன்னதி தெரு, தாமல் கிராமம்,  காஞ்சிபுரம்,   என்பவரை 110 குவிமுச - வின் படி நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மூலமாக 25.04.2022 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

2. மணிமாறன் (29)  த/பெ.குணசேகரன், நெ.213/3 ரோட்டு தெரு, தாமல் கிராமம்,  காஞ்சிபுரம்,  என்பவரை 110 குவிமுச - வின் படி நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மூலமாக 30.03.2022 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்படி, துளசிராமன் மற்றும் மணிமாறன் இருவரும் சேர்ந்து 16.07.2022 அன்று பாலுசெட்டிசத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஏனாத்தூர் கிராமம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அன்பு என்பவரின் தாபாவில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் அவரை கத்தியால் காயப்படுத்தி மிரட்டி கல்லாவில் இருந்த 2500 ரூபாய்   பணத்தை திருடி சென்றது சம்மந்தமாக பாலுசெட்டிசத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். 

எனவே, இவர்கள் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக துளசிராமன் 240 நாட்களும், மணிமாறன் 214 நாட்களும் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.

No comments

Thank you for your comments